/* */

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பில் 225 காவலர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பு
X

கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்த காலனி பகுதியில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் உக்கடம் காவல் நிலைய எல்லை,காட்டூர் காவல் நிலைய எல்லை, சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லை, ஆர்.எஸ் புரம் காவல் நிலைய எல்லையை சேர்ந்த 225 காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கொடி அணிவகுப்பானது சிவானந்த காலனியில் துவங்கி கண்ணப்ப நகர், இரத்தினபுரி வழியாக 60 அடி ரோட்டை வந்தடைந்தது.

இந்த கொடி அணிவகுப்பில், கோவை மாநகர காவல்துறையினருக்கு ரோந்து பணிக்காக அளிக்கப்பட்ட புதிய சிவப்பு நிற ரோந்து வாகனங்கள் (8 வாகனங்கள்) இடம்பெற்றன. கொடி அணிவகுப்பிற்கு முன்புறம் காவல்துறையினரின் இசை வாத்திய குழுவினர் தேசிய பாடல்களை இசைத்தபடி சென்றனர்.

Updated On: 8 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  3. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  4. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  7. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  8. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  9. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  10. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து