/* */

தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
X

பைல் படம்

சென்னை: கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பில்லை.

கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று ஆய்வு செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை. கேரளாவிலிருந்து பேருந்து, ரயில் மூலமாக தமிழகம் வரும் மக்களை பரிசோதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் இதுவரை 3,929 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பு பூஞ்சை நோய்க்காக தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 July 2021 5:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...