/* */

கல்வி நிறுவனங்களில் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் : அமைச்சர் நாசர் அறிவிப்பு

தமிழகத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கல்வி நிறுவனங்களில் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் :  அமைச்சர் நாசர் அறிவிப்பு
X

சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் துறை ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசுகிறார். 

சென்னை: தமிழகத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் துறை ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசியதாவது, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் மாத விற்பனை, 400 கோடி ரூபாய். 10 லட்சம் லிட்டர் பால், பால் பவுடர் மற்றும் வெண்ணையாக உருமாற்றம் செய்யப்படுகிறது. பாக்கெட் பால் விற்பனை, தினசரி, 26 லட்சம் லிட்டராகவும், உதிரிப்பால் விற்பனை, நான்கு லட்சம் லிட்டராகவும் உள்ளது.

பாலில் வைட்டமின் 'ஏ' மற்றும் 'டி' நுண்ணுாட்டங்களை செறிவூட்டவும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும், ஆவின் பால் விற்பனை நிலையங்கள் அமைத்து, விற்பனையை அதிகரிக்கவும், பால் உற்பத்தியாளர்களுக்காக மாதந்தோறும் குறை தீர்வு கூட்டம் நடத்தவும், பணிகள் நடந்து வருகின்றன.மேலும், பாலாடைக்கட்டி, திரட்டுப்பால், இளங்குழந்தைகளுக்கு பால் பவுடர், இனிப்பு இல்லாத பால்கோவா போன்ற புதிய பால் பொருட்கள் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும், பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமானால், விவசாயிகள் உற்பத்தி செய்யும், அனைத்து பாலையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய இயலும். ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 July 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’