/* */

சென்னை டாஸ்மாக் கடைகளில் விற்பனை கண்காணிப்பு: தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை டாஸ்மாக் கடைகளில் விற்பனை கண்காணிப்பு: தேர்தல் அதிகாரி பேட்டி
X

சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது எவ்வளவு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி, ஆணையர் பிரகாஷ் கூறினார்.

சென்னை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, வேட்பாளர்களின் தேர்தல் செலவினம் மற்றும் மாதுபான விற்பனை கண்காணிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. பின்னர் ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணம், பொருட்களை தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சாதாரண நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் எவ்வளவு விற்பனை நடக்கிறது, இப்போது எவ்வளவு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இதுவரை 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 1000 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறை சார்பில் 2 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Updated On: 30 March 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...