/* */

மேகதாது விவகாரம் : தமிழகஅரசு ஆலோசனையின்றி முடிவு எடுக்கப்படாது. மத்திய அமைச்சர் உறுதி

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் அனுமதி, ஆலோசனை இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உறுதியளித்தார் என்று நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மேகதாது விவகாரம் : தமிழகஅரசு ஆலோசனையின்றி முடிவு எடுக்கப்படாது. மத்திய அமைச்சர் உறுதி
X

பேட்டியளிக்கும் அமைச்சர் துரை முருகன்.

டெல்லியில் ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது.:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும். தமிழக அரசிடம் ஒப்புதல் பெறாமல் கர்நாடகா மத்திய அரசிடம் அனுமதி பெற்றது தவறு.

இதன் காரணமாக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் வலியுறுத்தப்பட்டது.

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி தராது என அவர் கூறினார். கர்நாடக ஒப்புதல் வாங்கி விட்டதால் மட்டும் மேகதாது அணை கட்டி விட முடியாது .

தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறினார்.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரமாக ஒரு தலைவரை நியமிக்க கோரியுள்ளோம்.மொத்தத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது " இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 6 July 2021 8:17 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு