/* */

வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது

சென்னை வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது
X

கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.

சென்னை வியாசர்பாடி மற்றும் எம் கே பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் எம்கேபி நகர் போலீசார் நேற்று அதிகாலை வியாசர்பாடி முல்லை காம்ப்ளக்ஸ் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். அவர்கள் வண்டியை நிறுத்தாமல் அதி வேகமாக சென்றுவிட்டனர்.

அவர்களைத் துரத்திப் பிடித்த போலீசார், அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இரண்டு 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர்கள் வியாசர்பாடி 19வது பிளாக் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் வயது 22 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் வயது 31 என்பது தெரியவந்தது.

இவர்கள் வெளிப் பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி அதை இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வைத்து வியாசர்பாடி எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்தது.

இதையடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 28 Dec 2021 4:23 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  2. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  3. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  4. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  5. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  9. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...