/* */

கொடுங்கையூரில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு

கொடுங்கையூரில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கொடுங்கையூரில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
X

திருஞானம்

சென்னை மாதவரம் அடுத்த கொடுங்கையூர் ஜம்புலிங்கம் காலனியில் கடந்த ஆறு மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் திருஞானம் (வயது 40). வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

மேலும் இவர் விடுமுறை நாட்களில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் கார்கள் சுத்தம் செய்யும் வேலையும் செய்து வந்தார். இந்த நிலையில் கொடுங்கையூர் ஜம்புலிங்கம் நியூ காலனி தாமோதரன் தெருவில் ஒரு வீட்டில் கார் சுத்தம் செய்ய சென்றபோது சாலையில் மின்சார வயர் அறுந்து தொங்குவதை பார்த்து அகற்றச் சென்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த மனைவி சரஸ்வதி கூச்சலிடவே உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...