/* */

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்
X

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம் 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று, காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ம் தேதி கருட சேவை உற்சவம் நடந்தது. 23ம் தேதி சூரிய, சந்திர பிரபை புறப்பாடு நடந்தது. 24ம் தேதி பல்லக்கு நாச்சியார் கோலத்தில், சுவாமி புறப்பாடு நடந்தது.

ஆறாம் நாள் விழாவான நேற்று, காலை 5:15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு, யானை வாகன புறப்பாடு நடந்தது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று, தேர் திருவிழா நடைபெற்றது. அதை முன்னிட்டு, இன்று அதிகாலை, பார்த்தசாரதி பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இதில் கலந்துகொண்டு தேரோட்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Updated On: 26 Feb 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!