Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கொடுங்கையூர் பகுதியில் 80 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது
கொடுங்கையூர் பகுதியில் 80 கிலோ குட்கா மற்றும் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
HIGHLIGHTS
சென்னை கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலை, பகுதியில் ஒருவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியம் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் தனிப்படை உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கொடு ங்கையூர் திருவள்ளூர் சாலை பகுதியில் பூமாரியப்பன் வயது 31 என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பூ மாரியப்பனை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 80 கிலோ குட்கா பொருட்களையும் போலீசார் பறி முதல் செய்தனர்.