/* */

13 கோடி மதிப்புள்ள அபூா்வ திரவ கரைசல் கடத்தல்: கல்லூரி பேராசிரியா் உட்பட 9 பேர் கைது

வனப்பகுதியில் ரூ.13 கோடி மதிப்புள்ள அம்பா் கிரீஸ் அபூா்வ திரவ கரைசல் பறிமுதல். கல்லூரி பேராசிரியா் உட்பட 9 பேர் கைது.

HIGHLIGHTS

13 கோடி மதிப்புள்ள அபூா்வ திரவ கரைசல் கடத்தல்: கல்லூரி பேராசிரியா் உட்பட 9 பேர் கைது
X

செங்கல்பட்டு மாவட்டம் அருகே தாழம்பூா் வனப்பகுதியில் சட்டவிரோதமாக கடத்தல் செயல்களில் ஈடுபடுட்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் OMR சாலை அருகே தாழம்பூா் வனப்பகுதியில் ஒரு கும்பல் இருந்து சட்டவிரோத கடத்தல் செயல்களில் ஈடுபடுட்டு வருவதாக திருப்போரூா் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்போரூா் பாரஸ்ட் ரேஞ்சா் P.கல்யாண் தலைமையில் தனிப்படை வனத்துறையினா் நேற்று இரவு அங்கு விரைந்து சென்றனா்.

வனத்துறையினர் வருவதை அறிந்து அந்த கும்பல் காா் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தப்பியோடினா். ஆனாலும் வனத்துறையினா் விடாமல் விரட்டி சென்று துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்தனா்.

அவா்களை சோதனையிட்டதில், அவா்கள் வைத்திருந்த 5 பைகளில் திமிங்கலத்திலிருந்து வெளியேறும் மிகவும் அபூா்வமான அம்பா் கிரீஸ் (AMBER GRIS) எனப்படும் ஒரு திரவம் இருந்ததை கண்டுப்பிடித்தனா். இது திமிங்கலத்தின் வாயிலிருந்து வெளியேறும் ஒருவகை உமிழ்நீராகும். திமிங்கலம் உடலில் சோ்ந்துள்ள கொழுப்பு உமிழ்நீராக வெளியாகும். இதை அம்பா் கிரீஸ் என்று கூறுவாா்கள். இது மருத்துவ குணமுடையது. இது கிடைப்பது அபூா்பமானது. எனவே மத்திய அரசு இதை தனியாா்கள் எடுப்பதற்கோ, வெளிநாடுகளுக்கோ கடத்துவதற்கு தடை விதித்துள்ளது.

மருத்துவ குணமுடைய இந்த அம்பா் கிரீஸ் உடலில் ஹாா்மோன் குறைபாடு உள்ளவா்களுக்கு மிகவும் பயன்படுகிறது. அதைப்போல் விலை உயா்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதை கடற்பகுதிகளில் கடத்தல் ஆசாமிகள் சட்டவிரோதமாக சேகரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனா்.

இதையடுத்து கடத்தல் கும்பலை சோ்ந்த காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தை சோ்ந்த மோகன்தாஸ்(34), கடலூா் மாவட்டம் சிதம்பரத்தை சோ்ந்த அருள்முருகன்(30), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை விக்னேஷ் (29), செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் டேனியல்(53), தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு ஆதித்யா(43), கா்நாடகா மாநிலத்தை சோ்ந்த தனியாா் கல்லூரி பேராசிரியா் சதீஷ்குமாா்(50), சென்னை அரும்பாக்கம் ராஜன்(51), சென்னை நெற்குன்றம் முருகன்(48), காஞ்சிபுரம் தண்டலம் மோகன்(50) ஆகிய 9 பேரை கைது செய்தனா்.அவா்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு காா்,2 இரு வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

இவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 13 கிலோ அம்பா் கிரீசின் இந்திய மதிப்பு ரூ.13 கோடி. வெளிநாடுகளில் சா்வதேச மதிப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரையும் திருப்போரூா் வனத்துறை அலுவலகம் கொண்டு வந்து மேலும் விசாரணை நடத்தினா். அதோடு இதை எந்தெந்த பகுதிகளிலிருந்து சேகரித்தனா். இதில் மேலும் யாா்? சம்பந்தப்பட்டுள்ளனா்? இதை எந்த நாட்டிற்கு கடத்த திட்டமிட்டிருந்தனா்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் இவா்கள் 9 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜா்படுத்த்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 20 Aug 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?