/* */

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் வண்டலூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
X

வண்டலூர் அருகே சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, புதுபாக்கத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டும், பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் நீதி வேண்டும், நீதி வேண்டும், சிதைக்காதே, சிதைக்காதே மாணவிகளின் வாழ்க்கையை சிதைக்காதே, தண்டனை கொடு, தண்டனை கொடு மாணவியை படுகொலை செய்த கயவர்களுக்கு தண்டனை கொடு, பள்ளியின் உரிமத்தை ரத்து செய் என கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் மாண்வர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேசி போரட்டத்தை கைவிட வைத்தனர்.

Updated On: 21 July 2022 10:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!