/* */

திருப்போரூர் அருகே 35 லிட்டர்  கள்ளச்சாராயம் பறிமுதல்; 2 பேர் கைது!

திருப்போரூர் அருகே மானாமதியில் 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 35 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு,

HIGHLIGHTS

திருப்போரூர் அருகே 35 லிட்டர்  கள்ளச்சாராயம் பறிமுதல்; 2 பேர் கைது!
X

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைதானவர்களை காணலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஏரிக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக மானாமதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது, தகவலின் பேரில் திருப்போரூர் ஆய்வாளர் கலைச்செல்வி, மற்றும் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், மானாமதி உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஏரிக்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசாரை பார்த்ததும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேர் தப்பியோடினர். அதில் இருவரை பிடித்து விசாரணை செய்ததில், மானாமதியை சேர்ந்த சுதா (43), கமலக்கண்ணன் (33) என தெரிந்தது. அவர்களிடமிருந்த, 53 ஆயிரம் மதிப்புள்ள, 35 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

இருவரை கைது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சுதாவை புழல் சிறையிலும், கமலக்கண்ணனை செங்கல்பட்டு சிறையிலும் அடைத்தனர். மேலும் தலைமுறைவாக உள்ள ஏழுமலையை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 28 May 2021 9:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...