/* */

லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

ஆலந்தூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.

HIGHLIGHTS

லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
X

ஆலந்தூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மீனபாக்கம் அடுத்த ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதில், ஆதம்பாக்கத்தில் உள்ள தனது நிலத்தில் பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தேன். எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதற்கு ஆலந்தூர் தாசில்தார் சரவணனுக்கு ரூ.3 லட்சமும் சர்வேயர் கிஷோருக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டனர். பணத்தை தர விருப்பம் இல்லாததால் புகார் செய்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனுடன் சென்றனர். அப்போது சர்வேயரிடம் ரூ.50 ஆயிரம் முருகன் தந்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கிஷோரை மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட கிஷோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை