/* */

குடி போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபர்: விபத்தில் பலர் காயம்

குடி போதையில் காரை தாறுமாறாக ஓட்டி, பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

குடி போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபர்: விபத்தில் பலர் காயம்
X

குடி போதையில் காரை தாறுமாறாக ஓட்டி பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை அடுத்த தாம்பரம் காந்தி சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளம்பெண் உட்பட மூன்று பேர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரை மடக்கி பிடித்த போது கார் ஓட்டுனர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது அவர் தாம்பரம் அருகில் உள்ள தர்காஸ், எட்டையபுரம் பகுதியை சேர்ந்த தனசேகர்(30), என தெரிய வந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 13 April 2022 8:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...