/* */

மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 3 பசு மாடு, 2 கன்று குட்டிகள் பலி

மேடவாக்கத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி, மாடுகள் பலியாகின.

HIGHLIGHTS

மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 3 பசு மாடு, 2 கன்று குட்டிகள் பலி
X

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து பலியான மாடுகள்.

சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம், ரவி மெயின் ரோட்டில், உயர் மின்னழுத்த கம்பியானது அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அப்போது, மேய்ச்சலுக்காக சென்று கொண்டிருந்த 3 பசு மாடுகள், மற்றும் இரண்டு கன்று குட்டி உட்பட 5 மாடுகள், இந்த மின்கம்பியை மிதித்துள்ளன. இதில் மின்சாரம் பாய்ந்து, நிகழ்விடத்திலேயே மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் உயர் மின்னழுத்த கம்பியானது அறுந்து விழுந்து மாடுகள் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேடவாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் கேட்ட போது காற்றினால் இரு கம்பிகள் உரசி அறுந்து விழுந்திருக்கலாம் என விளக்கம் அளித்தனர். சம்பவம் தொடர்பாக பள்ளிகரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு