/* */

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பெண்களை சந்தித்தார் தன்சானியா நாட்டின் ஆணையர்

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள பெண்களை தன்சானியா நாட்டின் ஆணையர் அனிஷா மெப்ஹா சந்தித்து உரையாற்றினார்.

HIGHLIGHTS

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பெண்களை சந்தித்தார் தன்சானியா நாட்டின் ஆணையர்
X

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள பெண்களை தன்சானியா நாட்டின் ஆணையர் அனிஷா மெப்ஹா சந்தித்து உரையாற்றினார். பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் பின் தங்கிய பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் வாழ்க்கை தரம் உயரும் வகையில் கடன் உதவி, தொழில்பயிற்சி, தற்காப்பு கலை உள்ளிட்ட பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த அறக்கட்டளை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், இந்த அறக்கட்டளை உறுப்பினர்களை சந்திக்க தன்சானியா நாட்டின் ஆணையர் அனிஷா மெப்ஹா சென்னை இன்று வருகை தந்தார்.

பின்னர் பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பெண்களுக்கு, பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை செய்துள்ள பணிகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. மேலும் இந்த அறக்கட்டளை மூலம் பயிற்சி பெற்ற பெண்கள் தங்களுடைய கைவினை பொருட்களை தன்சினியா நாட்டின் உயர் ஆணையர் அனிஷாவிற்கு வழங்கி கவுரவித்தனர்.

தொடர்ந்து அங்குள்ள இளம் பெண்கள் தாங்கள் கற்று வரும் தற்காப்பு கலையான சிலம்பம் பயிற்சியையும் உயர் ஆணையர் அனிஷா முன்பு செய்து காட்டினர். தொடர்ந்து அந்த பெண்களுடன் சிறிது நேரம் உரையாற்றியதுடன், அந்த பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார். உடன் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் திவ்யா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 11 April 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  6. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  7. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  8. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  9. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!