/* */

பொழிச்சலூரில் மனைவி இரு பிள்ளைகளை கொலை செய்த தந்தையும் தற்கொலை

மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

பொழிச்சலூரில் மனைவி இரு பிள்ளைகளை  கொலை செய்த தந்தையும் தற்கொலை
X

சென்னை பொழிச்சலூரில் பிள்ளைகள் மற்றும் மனைவியை கொலைசெய்து தானும் தற்கொலை செய்து கொண்ட தனியார் ஐடி நிறுவன ஊழியரான பிரகாஷ்

பொழிச்சலூரில் மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்த தந்தை தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் ஐடி நிறுவன ஊழியரான பிரகாஷ்(41), அவரது மனைவி காயத்திரி (39), இவர் பாஜகவில பொழிச்சலூரில் மண்டல மகளிரணி செயலாளராக உள்ளார். 9வது படிக்கும் மகள் நித்யஸ்ரீ(13), 2வது படிக்கும் மகன் ஹரி கிருஷ்ணன் (8), ஆகியோரை அமேசானில் வாங்கிய மரம் அறுக்கும் ரம்பத்தால் கொலை செய்து விட்டு பிரகாஷ் தானும் தற்கொலை செய்து கொண்டு காயத்திரியின் தந்தை காலை வந்து பார்த்து விட்டு அனைவரும் இறந்து கிடந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன் பேரில் சங்கர் நகர் போலீசார் நிகழ்விடத்திற்கு வந்த விசாரணை செய்தனர்.

கைரேகையை பதிவு செய்ய கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டுனுள் வந்து கைரேகையை பதிவு செய்தனர், தடயவியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர் அதில் (To whom so ever it may concern This is our me and my wife combined decision and no one is responsible for this act ), குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிகின்றனர். இதன் பின்னர் நேரில் வந்து பார்வையிட்ட தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறியதாவது: கடிதம் எழுதி வைத்து விட்டு சுவற்றில் ஒட்டி விட்டு இறந்திருக்கிறார்கள். அதில் ஒன்றாக சேர்ந்து முழுவெடுத்தாகவும் யாரும் காரணமில்லை என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.எலக்ட்ரிக் ரம்பத்தை அமேசானில் வாங்கி 19ம் தேதி டெலிவரி ஆகியுள்ளது.

செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வுக்கு உட்படுத்தி கடன் தொல்லை, மிரட்டல் இருக்கிறதா என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.முதற்கட்ட புலன் விசாரணையில் இரவு 11 மணிக்கு சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் சரியான நேரம் தெரியவரும்.மயக்க மருந்துகள் உட்கொண்டு பின்னர் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. 3.50 லட்சத்திற்கான கடன் பத்திரம் கிடைத்துள்ளது தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் என பேட்டியளித்தார்.

தடவியல் துறையினர் ஆய்விற்கு பின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை முடிந்து 4 பேரின் உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, குரோம்பேட்டையில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின் தான் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்யப்பட்டதா என்ற விபரம் தெரியவரும்.

Updated On: 28 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?