/* */

அடகு கடையில் நகை வாங்குவது போல் நடித்து 30 சவரன் நகை அபேஸ் செய்த வாலிபர்

அடகு கடையில் நகை வாங்குவது போல் வந்து 30 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அடகு கடையில் நகை வாங்குவது போல் நடித்து 30 சவரன் நகை அபேஸ் செய்த வாலிபர்
X
திருட்டு போன நகை அடமான கடை

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் பல வருடங்களாக அடகுகடை, மற்றும் நகை விற்பனை கடையை நடத்தி வருபவர் கமலேஷ் ஜெயின், இவரது கடைக்கு நகை வாங்குவது போல் வந்த இளைஞர் ஒருவர் தங்கச் சங்கிலி வேண்டும் என கேட்க அவரும் கடையில் இருந்த செயின்களை காண்பித்துள்ளார்.

செயினின் மாடல் பிடிக்க வில்லை என கூறிய இளைஞர், வேறு செயினை காண்பிக்க கேட்டுள்ளனர். இதனால் கமலேஷ் ஜெயின் தெரிந்தவரின் நகை கடையில் இருந்து 5 தங்கச் சங்கிலியை எடுத்து வந்து காண்பித்துள்ளார்.

அதனை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த போதே நகைக்கடைகாரரின் கவனத்தை திசை திருப்பி, கண்ணிமைக்கும் நேரத்தில் 30 சவரன் மதிப்புள்ள, 5 தங்க சங்கிலியையும் எடுத்துக் கொண்டு, வெளியில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபருடன் தப்பிச் சென்றார். சம்பவம் தொடர்பாக கமலேஷ் ஜெயின் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 31 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  2. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  3. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  4. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  5. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  6. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  7. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  10. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்