Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு காபி விற்பனை
மதுராந்தகம் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காபியை ஒரு ரூபாய்க்கு அளிக்கும் கடைக்காரர்
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி தேசிய நெடுஞ்சாலை அருகில் முரளி என்பவர் மதர் காபி ஷாப் நடத்தி வருகிறார்.
இவர் தன்னுடைய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை காண்பித்தால் 25 ரூபாய் மதிப்புள்ள காபியை ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார். ஒரு நபருக்கு வாரம் ஒருமுறை என்ற கணக்கில் நான்கு வாரம் ஒரு ரூபாய்க்கு காபி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஒரு ரூபாயும் நிவாரண நிதிக்கு கொடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வரப்போற மூன்றாம் அலையை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இதனை செய்து வருகிறார். இந்த செயலில் இவரது குடும்பத்தினர் அனைவருமே ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.