/* */

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ராணுவஅணிவகுப்பு

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ராணுவஅணிவகுப்பு
X

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த ஒரத்தி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பில் 452-டடாக் சி பட்டாலியன் கம்பெனி பிரிவைச் சார்ந்த எல்லை பாதுகாப்பு படை கிருஷ்ணகோபால் தலைமையிலான 50 ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்புடன் நடைபெற ராணுவ ஒத்திகை நடத்தினர்.

இதனை மதுராந்தகம் டி.எஸ்.பி.கவினா உத்தரவின் பேரில் அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன் முன்னிலையில் ராணுவ அணிவகுப்பு ஒரத்தி பேருந்து நிலையம் எலப்பாக்கம் பேருந்து நிலையம் முதல் பிண்ணம்பூண்டி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் முக்கிய சாலையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பின் போது ஒரத்தி சப்இன்ஸ்பெக்டர் மோகன் உட்பட சக காவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 2 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...