Begin typing your search above and press return to search.
அச்சிறுபாக்கத்தில் 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு தீயணைப்புப்படையினர் மீட்பு
அச்சிறுபாக்கத்தில் 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு தீயணைப்புப்படையினர் மீட்டனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட இராவதநல்லூரில் மிகக் கொடிய விஷமுள்ள கண்ணாடி வீரியன் பாம்பு பிடிபட்டது. இராவத்தநல்லூரில் சுமார் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு அச்சிறுபாக்கம் தீயணைப்பு துறையினரால் பிடிக்கப்பட்டு பின்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
மேலும் இது கூறித்து துரிதமாக செயல்பட்டு கண்ணாடி வீரியன் பாம்பை பிடித்த தீயணைப்புதுறை நிலைய அலுவலர் பொறுப்பு அ.வீராசாமி, முன்னணி தீயணைப்பு அ.பிரபு, ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்ததற்கு அப்பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.