/* */

செய்யூர் அருகே மீண்டும் கல்குவாரி லாரி மோதி ஒரு இளைஞர் பலி

செய்யூர் பகுதியில் இரு நாட்களில், கல்குவாரி லாரிகளால் இருவர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

செய்யூர் அருகே மீண்டும் கல்குவாரி லாரி மோதி ஒரு இளைஞர் பலி
X

விபத்தில் பலியான லோகநாதன்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இரண்டு நாட்களில், கல்குவாரி லாரிகள் மோதி, அடுத்தடுத்து இருவர் பலியான சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு செய்யூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்மணி, இரு தினங்களுக்கு முன்னதாக, கல்குவாரி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, இன்று செய்யூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் அதேபோன்ற ஒரு விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொண்னாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகநாதன் (26) என்பவர், நாகமலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இன்று ஏப்ரல் 17ஆம் தேதி அதிகாலை, தனது இருசக்கர வாகனத்தில், பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிரே அசுர வேகத்தில் வந்த கல்குவாரி லாரி ஒன்று லோகநாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகநாதனை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேல்சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லோகநாதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரு நாட்களில், தொடர்ந்து கல்குவாரி லாரிகளால் இருவர் உயிரிழந்த சம்பவம், செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 April 2021 7:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...