Begin typing your search above and press return to search.
மழை பாதிப்பு: 1000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் சார்பில் உதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள், போர்வை, பாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மாவட்ட ஆட்சியரிடம் அந்நிறுவன நிர்வாகிகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், செங்கல்பட்டு கோட்டாட்சியர் சாகிதாபர்வீன், மதுராந்தகம் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த கணேஷ், மணி, மற்றும் ஸ்ரீபன், சுதாகர், ஆகியோர் உடனிருந்தனர்.