வண்டலூர் பூங்காவுக்கு விலங்கு பரிமாற்ற முறையில் வந்த புலி, பாம்பு, மண்ணுளி பாம்பு
2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்கப் புலி, 2 ஜோடி நீக்கத்தான் பாம்பு, ஒரு ஜோடி விட்டேக்கர் மண்ணுளி பாம்பு புதிதாக வந்துள்ளன
HIGHLIGHTS
வண்டலூர் பூங்காவில் விலங்கு பரிமாற்ற முறையில் 2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்கப் புலி, 2 ஜோடி நீக்கத்தான் பாம்பு, மற்றும் ஒரு ஜோடி விட்டேக்கர் மண்ணுளி பாம்பு ஆகிய விலங்கினங்கள் புதிதாக வந்துள்ளது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் டாக்டர் கே.சிவர்மா காந்த் பிலிகுலா உயிரியல் பூங்கா மங்களூரு கர்நாடகம் இடையேயான விலங்கு பரிமாற்றத் திட்டத்திற்கு, புது தில்லியிலுள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி இரு உயிரியல் பூங்காக்களும் 1.05.2022 முதல் 05.05.2022 வரை விலங்கு பரிமாற்றத்தை மேற்கொண்டனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் வெள்ளைப் புலி மற்றும் ஒரு பெண் நெருப்புக்கோழியை கால்நடை மருத்துவர், உயிரியலாளர் மற்றும் சீருடைப் பணியாளர்கள் அடங்கிய குழுவுடன் பிலிகுலா உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் பிலிகுலா உயிரியல் பூங்காவிலிருந்து 2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்கப் புலி, 2 ஜோடி நீக்கத்தான் பாம்பு, மற்றும் ஒரு ஜோடி விட்டேக்கர் மண்ணுளி பாம்பு ஆகிய விலங்குகள் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
இரண்டு உயிரியல் பூங்காக்களும் ஒப்புதல் வழங்கப்பட்ட விலங்குகளை பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது. வந்துள்ள விலங்குகள் தனிமைப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு கால்நடை மருத்துவர்களின் மருத்துவ சான்றிதழ்படி விலங்குகள், விலங்கு இருப்பிடத்திற்கு மாற்றப்பட்டு பார்வையாளர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.