தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக திம்மாவரம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நீஞ்சல் மடுவில் மழை வெள்ள நீர் கரையை மீறி ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக வெங்கடேஸ்வரா நகரில் வெள்ள நீர் புகுந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்கள் வாங்க கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வெங்கடேஸ்வரா நகர் பகுதியை ஆய்வு செய்து வெள்ள நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது