Begin typing your search above and press return to search.
பள்ளி மாணவி தற்கொலை - கல்லூரி மாணவனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
சென்னை மாங்காட்டில், பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
சென்னை அருகே மாங்காட்டில் 11-ம் வகுப்பு மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்கி (எ) விக்னேஷ்,20, நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்ஸோ, தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
செங்கல்பட்டில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் உள்ளதால், அவரை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.