/* */

சென்னை மாணவர் தாக்குதல் சம்பவம்: செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னையில் சட்ட மாணவரை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

சென்னை மாணவர் தாக்குதல் சம்பவம்: செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
X

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட அரசினர் சட்டக்கல்லூரி மாணவர்கள்.

சென்னை வியாசா்பாடி புதுநகா், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ரகீம் (21). இவா் தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பிஎல் ஐந்தாமாண்டு படித்து வருகிறாா். மேலும் அவா், பகுதி நேரமாக கொடுங்கையூரில் உள்ள ஒரு மருந்தகத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அவா் கடந்த 14-ஆம் தேதி பணி முடித்து மிதிவண்டியில் வீடு திரும்பும்போது, கொடுங்கையூா் எம்ஆா் நகா் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அப்துல் ரகீமை மறித்து விசாரித்தனா். அப்போது அப்துல் ரகீம் முகக் கவசம் சரியாக அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து அவருக்கு போலீஸாா் அபராதம் விதித்துள்ளனா். ஆனால் அப்துல் ரகீம், மறுப்பு தெரிவித்து பேசியதாக அவரது மிதிவண்டியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து அப்துல் ரகீமை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், இச்சம்பவம் தொடா்பான காட்சிகள் பதிவாகாமல் இருக்க காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸாா் திருப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். மேலும் சட்டக்கல்லூரி மாணவனை தாக்கி போலீசாரை கைது செய்திடவேண்டும், அக்காவல்நிலையத்தில் பொருப்பு பதவியிலிருக்கும் ஆய்வாளரை உடனடியாக நீக்கி, உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அரசினர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 25 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?