/* */

செங்கல்பட்டில் இடி-மின்னலுடன் கனமழை: வெள்ளக்காடான சாலைகள்

செங்கல்பட்டில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது; இதனால், சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் இடி-மின்னலுடன் கனமழை: வெள்ளக்காடான சாலைகள்
X

செங்கல்பட்டு இராஜாஜி ரோட்டில் தேங்கியுள்ள மழைநீர்.

செங்கல்பட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் சிரமப்பட்டார்கள். நேற்றும், வழக்கம்போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. நேற்று மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன.

இந்நிலையில், இன்றுகாலை 6 மணி முதல், இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 8 மணிநேரம் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் அடைமழை கொட்டி தீர்த்தது. இதனால், வீதியில் நடந்து சென்ற பொதுமக்கள், ஆங்காங்கே ஒதுங்கினார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்தார்கள்.

செங்கல்பட்டின் முக்கிய வீதியான இராஜாஜி ரோடு பகுதியில் சாக்கடையில் அடைப்புகள் ஏற்பட்டு அங்கு மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறியது. முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும், பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமின்றி தாம்பரம், மதுராந்தகம் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் என முழுவதும் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

Updated On: 5 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  5. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  7. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  10. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!