வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த எம்எல்ஏ கண்ணன்
Free Medical Camp - நாயகனைபிரியாள் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை, எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
Free Medical Camp -ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், நாயகனைபிரியாள் ஊராட்சியில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை சார்பில், தமிழக முதல்வர் ஆணைப்படி, கலைஞரின் "வருமுன் காப்போம்" மருத்துவ முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கி வைத்தார்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், இல்லம் தேடி மருத்துவ பெட்டகம், மாணவர்களுக்கு கண்ணொளி திட்டத்தின் முலமாக மூக்கு கண்ணாடி ஆகியவைகளை வழங்கி ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர்.தட்சிணாமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் ராசாராம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மருதகாசி மற்றும் மருத்துவர்கள் வேல்முருகன், மாலதி கண்ணன், மாலதி (மகப்பேறு) ,கவிதா (குழந்தைகள் நலம்) புகழேந்தி, சரண்யதேவி, வசுமதி (சித்த மருத்துவம்), தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி மற்றும் சிறப்பு மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2