/* */

கங்கைகொண்டசோழபுரம் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி பணிகள் ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொல்லியல்துறை தகவல்.

HIGHLIGHTS

கங்கைகொண்டசோழபுரம் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
X

அரியலூர் : 15 நாள் முழுஊரடங்கை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி பணிகள் ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2வது அலை கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக எட்டு மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு 15 நாள் முழுஊரடங்கை அறிவித்துள்ளது. இன்று தொடங்கி 24ம் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கு தொடங்கியுள்ளது. இதனையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகை மேடு பகுதியில் தமிழகத் தொல்லியல் துறை சார்பில் 4ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு, கடந்தமாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றது.

இந்நிலையில் தற்போதைய தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக மாளிகைமேட்டில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகள் ஊரடங்கு காலம் முடிந்து மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகழாய்வு பணிகள் நடைபெறும் மாளிகை மேடு பகுதியானது தற்போது வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

Updated On: 10 May 2021 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...