/* */

அரியலூரில் சாலைப் பணியாளர்கள் வாழைக்கன்று நட்டு ஆர்ப்பாட்டம்

அரியலூரில் சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் வாழைக்கன்று நட்டு நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அரியலூரில் சாலைப் பணியாளர்கள் வாழைக்கன்று நட்டு ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் வாழைக்கன்று நட்டு நூதன கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அரியலூர் நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர் சங்கத்தினர் இன்று வாழைக்கன்று நட்டு நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக முறைபடுத்தி ஆணை வழங்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தும் அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், கிராமபுற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தபட்டது.

மேலும் பணிகாலத்தில் உயிர்நீத்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது. மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தந்து சாலை பணியாளர்களின் வாழ்க்கையை வாழையடி வாழையாக தழைத்தோங்க செய்ய வேண்டும் என நூதன முறையில் வாழைமர கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

இதில் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 April 2022 5:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  3. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  4. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்