Begin typing your search above and press return to search.
அரியலூரில் மீண்டும் திங்கள்தோறும் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டம்
மனு அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தவறாது மனுவில் குறிப்பிட வேண்டும்
HIGHLIGHTS
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கு இணங்க, அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் திங்கட்கிழமைதோறும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 04.10.2021 அன்று காலை 10.00 மணியளவில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்டரங்கில் (தரைதளம்) நடைபெறவுள்ளது.
மனு அளிக்க வரும் பொதுமக்கள் அனைவரும், தவறாமல் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தவறாது மனுவில் குறிப்பிட வேண்டும் என, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.