4 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு இரயில் மூலம் அறவைக்கு சென்றது
அரியலூர் - 2020 -21 சாகுபடி செய்யப்பட்ட 4 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கிருஷ்ணகிரிக்கு தனி சரக்கு இரயில் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஆகிய ஒன்றியங்கள் டெல்டா பகுதியாகும். சாகுபடி செய்யப்பட்ட நெல், விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு, அந்தந்த கொள்முதல் நிலையங்களில் இருந்து, இருப்பு வைக்கப்படும் குடோன்கள் அனுப்பப்பட்டது.
தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தனி சரக்கு ரயில் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அறவைக்கு அனுப்பும் பணி தற்போது தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் பணியில் நாள் ஒன்றுக்கு 45 லாரிகளில் மூலம் ஆயிரம் டன் நெல்மணிகள் 21 பெட்டிகள் அடங்கிய தனி சரக்கு ரயில் மூலம் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி அனுப்பப்படுகின்றது. இந்த பணியின் மூலம் 4 ஆயிரம் டன் நெல்மணிகள் ஆலைக்கு அறவைக்கு அனுப்படுகின்றது. இதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.