/* */

4 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு இரயில் மூலம் அறவைக்கு சென்றது

அரியலூர் - 2020 -21 சாகுபடி செய்யப்பட்ட 4 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கிருஷ்ணகிரிக்கு தனி சரக்கு இரயில் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

4 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு இரயில் மூலம் அறவைக்கு சென்றது
X

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஆகிய‌ ஒன்றியங்கள் டெல்டா பகுதியாகும். சாகுபடி செய்யப்பட்ட நெல், விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு, அந்தந்த கொள்முதல் நிலையங்களில் இருந்து, இருப்பு வைக்கப்படும் குடோன்கள் அனுப்பப்பட்டது.

தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தனி சரக்கு ரயில் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அறவைக்கு அனுப்பும் பணி தற்போது தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் பணியில் நாள் ஒன்றுக்கு 45 லாரிகளில் மூலம் ஆயிரம் டன் நெல்மணிகள் 21 பெட்டிகள் அடங்கிய தனி சரக்கு ரயில் மூலம் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி அனுப்பப்படுகின்றது. இந்த பணியின் மூலம் 4 ஆயிரம் டன் நெல்மணிகள் ஆலைக்கு அறவைக்கு அனுப்படுகின்றது. இதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 13 July 2021 7:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  5. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  6. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  7. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்