/* */

அரியலூர்:செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

அரியலூர் மாவட்டத்தில் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மற்றும் கல்லூரி பயிலும், பணிபுரியும் அல்லது சுயத்தொழில் புரியும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார் செல்போன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்ட கை, கால் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மற்றும் 75 சதவீதத்திற்குமேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட கல்லூரி பயிலும், பணிபுரியும் அல்லது சுயத்தொழில் புரியும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்;திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது.

எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்தவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று (தையல் பயிற்சி சான்று, கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று, சுயத்தொழில் புரிபவராயின் சுயத்தொழில் புரிவோருக்கான சான்று), மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலவலகம், அறை எண்:17, தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர்-621704 ல் 17.11.2021 அன்று நடைபெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 9 Nov 2021 11:21 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு