/* */

அரியலூரில் வேலைவாய்ப்பு முகாம்: தனியார் நிறுவனங்கள் முன்பதிவு செய்ய அழைப்பு

நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக முன்பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

அரியலூரில் வேலைவாய்ப்பு முகாம்: தனியார் நிறுவனங்கள் முன்பதிவு செய்ய அழைப்பு
X

பைல் படம்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், இணைந்து மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தவுள்ளது.

இந்த முகாமில் அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த தனியார்த்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் பொருட்டு, இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக முன்பதிவு செய்திட 10.06.2022-க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாமில் அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த தனியார்த்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 26 May 2022 12:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!