/* */

தீப்பெட்டி, சிகரெட், ஆயுதத்தோடு வராதிங்க... வாக்கு மையத்திற்கு வருவோருக்கு எஸ்.பி. அட்வைஸ்!

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வரவுள்ளவர்கள், தீப்பெட்டி, சிகரெட், ஆயுதங்களுடன் வரக்கூடாது என, அரியலூர் எஸ்பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தீப்பெட்டி, சிகரெட்,  ஆயுதத்தோடு வராதிங்க...  வாக்கு மையத்திற்கு வருவோருக்கு எஸ்.பி. அட்வைஸ்!
X

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ஆம் தேதி எண்ணப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூரில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. இப்பணிக்கு வரவுள்ளவர்களுக்கான கட்டுப்பாடுகளை, அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டசபை தேர்தல் 2021, வாக்கு எண்ணிக்கையானது, கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு, எந்த ஒரு வெற்றிக் கொண்டாட்டமும், ஊர்வலமும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றி சான்றிதழை பெற, வெற்றி வேட்பாளர் உடன் இருவருக்கும் மிகாமல் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேலும், 144 தடை உத்தரவு மற்றும் ஞாயிறு பொது முடக்கம் இருப்பதால் பொதுமக்களளோ, கட்சி உறுப்பினர்களோ வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியில் கூட்டமாய் கூடுவதை தவிர்க்க வேண்டும். அரியலூர் - கீழப்பழுவூர் சாலையில் தேர்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தேர்தல் நடத்தும் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உள்ள முகவர்கள் மட்டுமே, காலை 07.15 மணிக்கு முன்னர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும் முகவர்கள், தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், லேப்டாப், மின்னணு பொருட்கள் , தீப்பெட்டி, சிகரெட் மற்றும் எந்த ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது. கட்சி சின்னங்கள் அனுமதிக்கப்படாது.

வாக்கு எண்ணும் மையத்திலே குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லை. நோட்புக், பேப்பர் மற்றும் பென்சில், பால் பாயிண்ட் பேனா மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படும். கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட நோட் கொண்டு வர அனுமதி இல்லை.

மேலும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள்ளான, கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை அல்லது இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழை பெற வேண்டும். முகக்கவசம், சமூக இடைவேளை, கை கழுவுதலால் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

காய்ச்சல், சளி போன்ற கொரோனா தொற்றின் அறிகுறி இருப்பவருக்கு அனுமதி மறுக்கப்படும். உடல் வெப்பநிலை சாதாரண நிலைக்கு மிகவும் அதிகமாக இருப்பின் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். இவற்றை பின்பற்றாதவர் மீது, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 30 April 2021 12:06 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...