Begin typing your search above and press return to search.
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள கலெக்டர் அழைப்பு
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் பங்கேற்று தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கிடவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை தவிர்த்திடும் பொருட்டு மாவட்ட கலெக்டர் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாதத்தில் முதல் (06.01.2022) மற்றும் மூன்றாம் (20.01.2022) வியாழக்கிழமைகளில் அனைத்து மருத்துவர்கள் கொண்டு நடை பெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், முகம் மட்டும் தெரியும் படியான புகைப்படம்-05 ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வருகைபுரிந்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.