/* */

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

அரியலூர் மாவட்டத்தில் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற முகமையின் மூலம் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது

HIGHLIGHTS

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
X

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பயிர்கள் பாதிப்பு அடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் தங்கள் பயிர்களை பயிர் காப்பீடு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு 2021ம் ஆண்டில் சிறப்பு மற்றும் சம்பா பருவத்திற்கு அரியலூர் மாவட்டத்தில் 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா" என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் நெல் பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர் ஆகிய 15 பிர்காக்களிலும், மக்காச்சோளம் பயிருக்கு அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம் ஆகிய 6 பிர்காகளிலும், உளுந்து பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், உடையார்பாளையம், சுத்தமல்லி, தா.பழூர், மாத்தூர், செந்துறை, பொன்பரப்பி, திருமானூர், ஆகிய 9 பிர்காகளிலும் கீழ்க்கண்டவாறு பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு 2021ம் ஆண்டு சிறப்பு பருவத்தில்

நெல் பயிருக்கு டிசம்பர் 15ம் தேதி வரையிலும் ,

மக்காச்சோளம் பயிருக்கு நவம்பர் 15ம் தேதி வரையிலும்

சம்பா பருவ உளுந்து பயிருக்கு நவம்பர் 15-ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் 1 ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.537, மக்காச்சோளம் பயிருக்கு ரூ.295.5, மற்றும் உளுந்து பயிருக்கு ரூ.198.97 பிரிமீயத் தொகையை செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

தற்பொழுது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பயிர்கள் பாதிப்பு அடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் தங்கள் பயிர்களை பயிர் காப்பீடு செய்து கொள்ளவும்.

விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெறலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்யலாம்.

இது தொடர்பான விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...