அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1300 பேர். இதில் முதல் தடுப்பூசியை 911 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 13 பேர். மருத்துமனைகளில் 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை மொத்தம், 16,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,325 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றிற்கு இதுவரை, 254 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 483 பேர். இதுவரை 3,08,832 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,683 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,92,149 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,438. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,05,198. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 39,819 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,846 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,880 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 103 பேர். இன்று கொரோனா, முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1300 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 911 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 389 பேர் போட்டுக்கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.