Begin typing your search above and press return to search.
செந்துறையில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
4 மாநிலத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையொட்டி பா.ஜ.க.வினர் வெடிவெடித்து கொண்டாடினர்.
HIGHLIGHTS
நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், உத்தரபிரதேசம்,கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்பிரசாத் தலைமையில், ஒன்றியத் தலைவர்கள் (தெற்கு)இளங்கோவன், (வடக்கு) ரவி ஆகியோர் முன்னிலையில் தொண்டர்கள் முக்கிய சாலைகளில் வெடிவெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் பா.ஜ. கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.