/* */

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் உதவ எண்கள் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்காக உதவ பாதுகாப்பு சம்பந்தமான அரசின் உதவி எண்களை வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் உதவ எண்கள் அறிவிப்பு
X

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுமக்கள் தங்களின் பாதுகாப்புக்காக அரசின் சார்பில் உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குழந்தைகளுக்கான குற்றச்செயல் தடுப்பு மற்றும் உதவிகள் கூறுவதற்காக 1098 என்ற எண்ணும், மகளிர்க்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 181 என்ற எண்ணும், காவல் துறை சம்பந்தமான உதவிகளைப் பெறுவதற்காக 100 என்ற எண்ணும், முதியோருக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 14567 என்ற எண்ணும், இணையவழி குற்றங்களுக்காக தகவல்கள் தெரிவித்து நிவாரணம் பெறுவதற்காக 1930 என்ற எண்ணும் பொதுமக்களின் உபயோகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட எண்ணில் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு பொது மக்கள் உதவிகளைப் பெறலாம் என்று அரியலூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Updated On: 24 April 2022 7:37 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு