/* */

பெயர் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யலாமா?...படிங்க...

Name Rasi Porutham-தமிழகத்தில் கல்யாணம் என்றாலே ஜாதகப் பொருத்தம்தான் முதலில் பார்க்கின்றனர். அப்ப பெயர் பொருத்தம் என்பது? ....படிச்சு பாருங்களேன்...

HIGHLIGHTS

Name Rasi Porutham
X

Name Rasi Porutham

Name Rasi Porutham

முகூர்த்த நேரத்திற்கு முன்பாக பெண்ணுக்கு அளிக்கப்பட உள்ள முகூர்த்தப்புடவை சீர் (கோப்பு படம்)

கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாலே உடனே ஜாதகப் பொருத்தம் இருக்கிறதா? என்ற கேள்வி தான் முதல் கேள்வியாக இருக்கும். அந்த வகையில் ஜாதகம் என்பது மக்கள் மனதில் பதிந்து போனது.ஒரு சிலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். என் பெண்ணிற்கு கல்யாணத்திற்காக ஜாதகத்தினை எடுத்துவிட்டேன் என சொல்வார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?- அந்தப் பெண்ணின் ஜாதகத்திற்கு ஏற்ற வரனைத் தேட ஆரம்பித்துவிட்டார் என்று அர்த்தம்.

இதுபோல் அக்காலம் முதல் இக்காலம் வரை ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணப் பொருத்தங்கள், ஜாதகம் பார்ப்பது என்பது வாழையடி வாழையாக அவர்களின் முன்னோர்கள் எதனைப் பின்பற்றினார்களோ அதன் மூலம் பார்த்து திருமணத்தினை உறுதி செய்வதை வழக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிரு என்றுதான் முன்னோர்கள் சொல்லிட்டு போனாங்க.,ஆனா இக்காலத்தில் அந்த மாதிரி ஆயிரம் வருஷம் வரைக்கும் போறாங்களா,? ... அடுத்த வருடமே மணவாழ்வு முறிவுக்கு வந்துடுதுங்க..அப்படி என்ன தான் நடக்குது? ஆமாங்க கூட்டுக்குடும்பம் சிதைந்துபோனதால இளசுகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற சகிப்புத் தன்மை கொஞ்சம் கூட இல்லாததால் பல திருமணங்கள் ஓராண்டிற்கு மேல் ஒண்ணா வாழ முடியாம விவாகரத்து என்ற மணமுறிவை நோக்கி பயணம் செய்ய ஆரம்பிச்சுடராங்க... என்ன செய்ய?.

இந்த மாதிரி பல குடும்பங்களில் நடக்குது. இதற்கு ஒரு சில பெற்றோர்களும் காரணம் என சமுதாயத்தில் சொல்றாங்க... அவங்க காலம் வரைக்கும் கூட பெண் இருப்பாங்க... அதற்கப்புறம்... இவர்களின் நிலைமை என்னாகுமுங்க... ஒரு சில பெண்கள் இரண்டாவது கல்யாணத்துக்கு ஒத்துக்காம அப்பா, அம்மாவோடவே காலம் தள்ளிட்டு வர்றதுதான் காரணம்... அவர்கள் அவர்களுடைய மனசை மாற்றி மற்றொரு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யணுமுங்க.. அதுதான் கரெக்ட். அது சரிங்க இந்த கல்யாணம்னாலே பொருத்தம் பார்க்கணும்னு சொல்றாங்களே அதைப்பத்தி பார்த்துடுவோமா ....வாங்க ....பார்க்கலாம்....

பெண்ணுக்கு ஆணையும், ஆணுக்கு பெண்ணும் மனதளவில் பிடித்திருக்க வேண்டும். பெரியவர்களுக்கு பிடித்திருந்தது, பெற்றவர்களுக்கு பிடித்திருந்தது என்ற டயலாக்கையெல்லாம் ஆணோ, பெண்ணோ பேசிவிடக்கூடாது. அவரவர்களின் மனதிற்கு பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் தினமும் இருவரும்தான் சேர்ந்து வாழப்போகிறார்கள். எனவே நடைமுறையில் ஜாதகம், 10 பொருத்தம் என இருந்தாலும் முக்கியமாக மனப்பொருத்தம் அதாவது இருவருக்கும் மனதளவில் பிடித்திருக்கவேண்டும் என்பது மிக மிக முக்கியமாகும். யாரும் யாரையும் வற்புறுத்தாதீர்கள்.,இந்த விஷயத்தில்...

என்றும் நான் இனி உன்னோடுதான் இருப்பேன்...என்றஉறுதியில் கைக்கோர்த்து செல்லும் மணமக்கள் (கோப்புபடம்)

எந்த ஜாதகமாயினும் முதன் முதலில் தனித்தனியே இரு பாலரின் ஆயுளையும், தசாபலன்களையும், அறிந்து கொள்ள வேண்டும். ஏழாமிடத்தினைக்கொண்டு இந்த ஜாதகத்துக்கு இதுபொருந்துமா? என்று பார்த்துக்கொள்ளுதல் நலம். பின், தசப்பொருத்தங்களும் சரியாக இருந்தாலும் லக்னம், சந்திரன், சுக்கிரன் இந்த மூன்றையும் லக்னம் போல் வைத்துக்கொண்டு இதற்கு 2,4,7,8,12, ஆகிய இந்த இடங்களில் பாபிகள் இல்லாமலிருக்கிறார்களா? என்று பார்த்து யோசித்துப் பொருத்த வேண்டும்.

பாபிகள் இருப்பின், இருபாலருக்கும் அப்படியே இருக்க வேண்டும். ஒருவருக்கு (பெண்ணுக்கு) லக்னத்துக்கு 2ல் செவ்வாய் இருந்து, பிள்ளைக்கு லக்னத்துக்கு 8லோ, சந்திரனுக்கு 12லோ, அல்லது சுக்கிரனுக்கு 7லோ இருந்தாலும் போதும், அதாவது அந்தப் பாப சம்பந்தம் ஏதாவது ஒரு இடத்தில் இருத்தல் வேண்டும். இதற்கு ''தோஷஸாம்யம் '' என்று பெயர்.

விவாஹம் நடத்துவதற்கு முன் எவ்வளவோ விஷயங்களை நாம் அனுசரித்துப்பார்க்கவேண்டிய நிலையில் உள்ளோம். சதிபதிகளை ஆயிரங்காலத்துப்பயிர் என்றும், வாழையடி வாழையாக வாழவேண்டும் என்றும் பெருவாழ்வு வாழ வேண்டும் என்றும் பெரியவர்கள் ஆசிர்வதிப்பார்கள். வளம் பெற்ற வாழ்க்கையாக அமைய வேண்டுமானால் , முதலில் ''மனப்பொருத்தம்'' மிகவும் அவசியம். பந்துத்துவம் அல்லது உறவு முறை போய்விடுமே என்று நிர்ப்பந்தப்படுத்தி விவாஹம் செய்யக்கூடாது. பணத்துக்காக ஆசைப்பட்டு பெரிய இடம் விவாஹம் செய்வதும் மிக மிக தவறு ஆகும்

திருமண சீர்வரிசையில் பழங்கள், இனிப்புகள், வெற்றிலைபாக்கு....சாக்லேட்டுகள்,,, ஹைஜீனிக்காக (கோப்புபடம்)

பெற்றோர்கள் பார்க்கும் திருமணத்திற்கு கூட அவர்கள் ஜாதகம் ஜோசியம் பார்த்தாலும் கல்யாணத்திற்கு தயாராக உள்ள பெண், மற்றும் கல்யாணத்திற்கு தயாராக உள்ள ஆண் ஆகிய இருவரின் மனப்பொருத்தம் தாங்க முக்கியம். அந்த வகையில் மனதிற்கு பிடித்திருந்தால் மற்றது எல்லாம் அதன் பிறகுதாங்க. இப்ப புரியுதா...காதல் திருமணங்கள் எப்படி சக்ஸஸ் ஆகிறது. காதலிக்கிறதே மனசுக்கு புடிச்சவங்களைத்தானே காதலிக்கிறாங்க...

ஜாதகம் கணிக்க வேண்டும் என்றாலே பிறந்த தேதி, நேரம், நட்சத்திரம் போன்ற விபரங்களைக் கொடுத்தால்தான் புதிய ஜாதகத்தினைக் கணிக்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைத் தெரியாதவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? பெயரை மட்டும் பதிவு செய்து அதன் மூலம் பொருத்தம் பார்த்து திருமணத்தினை முடிப்பவர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.


கல்யாணத்திற்கு மணமக்களுக்கு வழங்கப்பட உள்ள பாத்திர சீர்வரிசை (கோப்பு படம்)

பெயர் பொருத்தத்தில் ஜாதகத்தில் பார்ப்பதை விட இன்னும் விபரமாக நாம் கணிக்கலாம். அதாவது பெயர் பொருத்தம் பார்ப்பது என்பது வேத ஜோதிடத்தின் அடிப்படையானது. ஜாதகத்தினை முழுமையாக கணக்கிட்ட பின்னர் அது பார்க்கப் போகும் பெண்ணின் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் பின்னர் முடிவைத்தரும்.

ஜாதகத்தினை பெயருக்கு ஏற்ப பொருத்துவதால் உங்களைப் பிடித்த தோஷக் குறைபாடுகள், அனைத்தும் நமக்கு தெளிவாக தெரியவரும்.தமிழகத்தினைப் பொருத்தவரை அனைவருமே ஒரு குழந்தை புதியதாக பிறக்கிறது என்றால் உடனே அதன் நேரம், நாள், நட்சத்திரத்தினைக் குறித்து வைத்துவிடுவது வழக்கமாக வைத்துள்ளனர். காரணம் பிற்காலத்தில் அதனை வைத்துதான் அந்த பிள்ளையின் ஜாதகத்தினைக் கணிக்க வேண்டும் என்பதால் அனைவரும் இதில் உறுதியாக இருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி பெயர் பொருத்தம் என்பது விசேஷமானதாக கருதப்படுகிறது. இது அவ்வளவு துல்லியமாக இருக்குமா? எல்லா விஷயங்களும் நிறைந்த ஜாதகத்தினை ஒப்பிடுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என பல ஆயிரம் சந்தேகங்கள் உங்கள் மனதில் எழலாம். அக்காலத்தில் பிறக்கும் போது விபரங்களை சரியாக எழுதி வைக்காதவர்கள் நிலைமை என்ன ஆகும் என யோசித்துப் பாருங்கள்? இதுபோன்ற ஒரு வாய்ப்பு இருப்பதால் அவர்கள் அந்த வழிமுறைகளைக் கையாண்டு திருமணத்தினை முடித்துவிடுகின்றனர்.

பெயரின் படி ஜாதகத்தினை எப்படி பொருத்தலாம் என்றால் நட்சத்திர கூட்டங்களின் படி ஆண், மற்றும் பெண் ஆகிய இருவரின் குணங்களையும் பொருத்துவதாகும். ஆண்,பெண் இருவரின் பெயரை வைத்து அவர்களின் குணங்கள் எத்தனை பெறுகின்றன என்பது கண்டறியப்படுகிறது. கணக்கீட்டின் படி 36 குணங்களைப் பெறுவது திருமணத்திற்கு நல்ல ஒரு துவக்கமாக கருதப்படுகிறது.


கல்யாணம்னா இனிப்புகள் இல்லாமலா...லட்டு, அதிரசம், கைமுறுக்கு,,,, பருப்பு தேங்காய் சகிதம் (கோப்பு படம்)

ஒரு நபர் ஜாதகத்தை பெயருடன் பொருத்தும்போது, ​​சில சூழ்நிலைகளில் செய்யப்படும் கணக்கீடு முற்றிலும் சரியானதல்ல. அத்தகைய சூழ்நிலையில், இரண்டு சூழ்நிலைகள் ஏற்படுகின்றன, முதலில், பிறந்த நேரத்தை கணக்கிடுவதன் மூலம் உங்கள் பெயர் கணக்கிடப்பட்டது மற்றும் இரண்டாவதாக, அந்த நேரத்தில் நீங்கள் இதே போன்ற பிடித்த பெயரைக் கொண்டிருப்பீர்கள்.

அக்கால வழக்கப்படி ஒருவரது வீட்டில் குழந்தை பிறந்துவிட்டால் அவரது குடும்ப ஜோதிடர்கள் அல்லது பண்டிதர்கள் மூலம் குழந்தைகளுக்கு பெயரிட்டனர். ஜோதிடமானது குழந்தையின் பெயரின் முதல் எழுத்தினை பிறந்த நேரத்திற்கு ஏற்ப சொல்லும். இதிலிருந்து குழந்தையின் பெயர் கண்டறிந்து வைக்கப்பட்டது.

இக்காலத்தில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளை இவர்களே நல்ல நேரத்தில் பிறக்க முயற்சிக்கிறார்கள். அதுமட்டும்அல்லாமல் குழந்தை பிறப்பதற்கு முன்பே பெயரினை தயார் செய்துவிடுகிறார்கள். இதுபோன்ற முரண்பாடுகள் இருப்பதால் பெயர் பொருத்தமும் சில நேரங்களில் துல்லியமாக அறிய முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது.

எடுத்துக்காட்டாக உங்கள் குழந்தை பிறந்த நேரத்தின்படி உங்கள் குழந்தையின் பெயர் ''டி'' என்ற முதல் எழுத்திலிருந்து வந்துள்ளது. ஆனால் இவர்கள் பெயர் வைக்கும் போது ''எஸ்''என்ற எழுத்தில் வைத்துள்ளனர்.இதுபோன்ற முரண்பாடுகள் எதிர்காலத்தில் தனது ஜாதகத்தினை அந்த குழந்தை பார்க்கும்போது முற்றிலும் தவறான பலனைத்தான் பெறும். ராசியின் அடிப்படையில் முதல் எழுத்தில் பெயரிடப்படாமல் வேறு பெயர் வைத்ததால் வந்த வினைதான்இது. பெயரானது ராசியின் அடிப்படையில் சரியாக வைக்காவிட்டால் முடிவுகள் எதுவும் சரியாகவே அமையாது.

பிறந்த நேரம் தெரியவில்லை என்றால் நீங்கள் பெயரைப் பயன்படுத்தலாம் ஜாதகத்தினைப் பெயரால் பொருத்தம், மணமகன், மணமகளின் வீட்டில் ராசியில் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் சந்திரனின் பண்புகள் அறியப்படுகின்றன. இதிலிருந்து பெறப்பட்டமுடிவுகள் அனைத்துமே திருமண வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு சிறந்த வகையில் உதவி புரியக்கூடியதாக இருக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 April 2024 4:22 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?