/* */

திருமணத்தில் கணப்பொருத்தம் எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சுக்கங்க..!

Gana Porutham Is Important Or Not-திருமண பொருத்தம் பார்ப்பதில் கணப்பொருத்தம் பார்ப்பது முக்கியமாக கருதப்படுகிறது.

HIGHLIGHTS

திருமணத்தில் கணப்பொருத்தம் எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சுக்கங்க..!
X

gana porutham meaning in tamil-திருமண பொருத்தம்.(மாதிரி படம்)

Gana Porutham Is Important Or Not-திருமண பொருத்தம் - கணப் பொருத்தம்

ஜோதிட சாஸ்திரத்தில் திருமண பொருத்ததில் மூன்று வகையான கணங்கள் உள்ளன.

அவை தேவ கணம், மனித கணம், ராட்ஷச கணம்.

அனைத்து நட்சத்திரங்களும் இந்த மூன்று கணங்களுக்குள் ஒன்றாகத் தான் இருக்கும், ஒருவர் மீது ஒருவர் சகிப்புத் தன்மை கொள்ளவே இந்த பொருத்தம் உள்ளது. இந்த பொருத்தம் இருப்பின் மற்றவர் மீது சகிப்புத்தன்மை ஏற்படும். இதனால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆக தினம் தினம் சண்டை, சச்சரவுகள் ஏற்படாது. கணம் என்பது குணத்தை வலியுறுத்தும் வார்த்தையாகும்.

1.தேவ கணம்

அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகியவை தேவ கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்.

2. மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை மனித கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்.

3. ராட்ஷச கணம்

கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகியவை ராட்ஷச கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்

ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே கணம் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்யலாம், அல்லது ஒருவர் தேவ கணம் மற்றொருவர் மனித கணம் என்றால் மணம் செய்யலாம்.

மணமகன் தேவ கணமாக இருந்து பெண் ராட்ஷச கணமாக இருந்தால் இந்த பொருத்தும் அவர்களுக்கு இல்லை, ஆனால் பெண் தேவ கணமாக இருந்து, ஆண் ராட்ஷச கணமாக இருந்தால் பொருத்தும் உண்டு. பெண்ணுக்கு ராட்ஷச கணமாக இருந்து ஆணின் நட்சத்திரம் 14 நட்சத்திரத்திற்கு பிறகு இருந்தாலும் பொருத்தம் உண்டு. இந்த பொருத்தம் இருந்தால் தான் இருவருக்கும் மண ஒற்றுமை ஏற்படும். இந்த பொருத்தம் இல்லாதவர்களுக்கு தின பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 8 April 2024 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...