சிவபெருமான் பார்வதியை கரம்பிடிக்க சதுரங்கம் (Chess) விளையாடினாரா?
Sathuranga Vallabanathar Temple-பார்வதியின் அவதாரத்தைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை சதுரங்கம் விளையாடி பெற்றதால் சிவபெருமான் சதுரங்க வல்லபநாதர் என்று அழைக்கப்பட்டார்
HIGHLIGHTS
Sathuranga Vallabanathar Temple-உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ள நிலையில், சிவபெருமான் பார்வதியின் அவதாரத்தை கரம் பிடிக்க சதுரங்கம் (Chess) விளையாடியதாக கூறப்படும் நிகழ்வு, சமூகவலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
சதுரங்கம் விளையாட்டுடன் தொடர்புடைய கோவில் குறித்தும், அங்கு மூலவராக விளங்கும் சதுரங்க வல்லபநாதர் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள திருப்பூவனூரில் உள்ள பழமையான சிவன் கோயில் சதுரங்கம் விளையாட்டுடன் தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலின் முதன்மைக் கடவுள் சதுரங்க வல்லபநாதர், சதுரங்கத்தில் வல்லுனர் என்று அழைக்கப்படுகிறார். பார்வதியின் அவதாரத்தைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை சதுரங்கம் விளையாடி பெற்றதால் சிவபெருமான் சதுரங்க வல்லபநாதர் என்று அழைக்கப்பட்டார் என்று புராணத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'1,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சதுரங்கம் விளையாட்டு விளையாடப்பட்டதாக கோவில் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதால், கோவிலின் பாரம்பரியம் மற்றும் விளையாட்டுடன் தமிழகத்தின் வரலாற்று தொடர்பை முன்னிலைப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்து உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதை ஒட்டி, சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கும் நேப்பியர் பாலம், சதுரங்க மேடை போல் வர்ணம் அடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2