/* */

திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
X

திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒப்பந்தத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் -மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றிற்கு ஏற்கனவே தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு இன்று தான் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கையெழுத்திட்டு உள்ளனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இம்முறையும் தனக்கு சீட் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் திருச்சியில் காங்கிரசார் அவருக்கு சீட் கொடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டின் போது திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த ஒரே தொகுதியில் வைகோவின் மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுவார் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துரை வைகோ ஏற்கனவே வைகோ கடந்த 2003 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொண்ட போது அவரது நடை பயணத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தான் முதல்முறையாக அவர் தேர்தல் களத்தை சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் மதிமுக விற்கு திருச்சி ஒதுக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். ஏற்கனவே கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலின் போது மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எல். கணேசன் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் அல்ல மதிமுக தொடங்கப்பட்ட பின்னர் முதல் மாநில மாநாடு நடைபெற்ற இடமும் திருச்சி தான். மதிமுகவின் முக்கிய முடிவுகள் பலவும் திருச்சியில் தான் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 March 2024 2:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!