/* */

ஓ.பன்னீர்செல்வம் உண்மையை கூறியுள்ளார்: சசிகலா கருத்து

சின்னம்மா மீது மரியாதை மதிப்பு உண்டு என்று ஓபிஎஸ் தற்போது உண்மையை தெரிவித்துள்ளதாக, சசிகலா கூறியுள்ளார்.

HIGHLIGHTS

ஓ.பன்னீர்செல்வம் உண்மையை கூறியுள்ளார்: சசிகலா கருத்து
X

கோப்பு படம் 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தின் முன்பு நேற்று ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, சசிகலா மீது தனிப்பட்ட முறையில் தற்போது மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். அத்துடன், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த சதி திட்டமும் தீட்டவில்லை. ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் கருத்துக்கு இன்று சசிகலா பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், கடவுளுக்கு தெரிந்த உண்மை, மக்களுக்கும் தெரிந்துள்ளது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது. உண்மை காலதாமதமாக மக்களுக்கு தெரியலாம் ஆனால் திரையிட்டு மறைக்க முடியாது.

அதிமுகவில், தொண்டர்கள்தான் ஆணிவேர் என எம்ஜிஆர் அதிமுக சட்டத்தை வகுத்துள்ளார். ஏதோ நூறுபேர் பதவியில் இருந்துகொண்டு கருத்து தெரிவிப்பதால் அந்தக் கருத்தை ஏற்க முடியாது. சின்னம்மா மீது மரியாதை மதிப்பு எப்பொழுதும் உண்டு என்று ஓபிஎஸ் தற்போது உண்மையை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Updated On: 23 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  5. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  7. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  9. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  10. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!