/* */

periyar quotes in tamil மூட நம்பிக்கையை ஒழிக்க பாடுபட்ட பெரியாரின் பொன்மொழிகள்....

Periyar Quotes in Tamil - தமிழகத்தில் திராவிட கட்சியை தோற்றுவித்தவர் பெரியார் என்று அழைக்கப்டும் ஈ.வெ. ராமசாமி. இவரின் பொன்மொழிகளைப் பார்ப்போமா.,

HIGHLIGHTS

Periyar Quotes in Tamil
X

பெரியார் ஈ.வெ. ராமசாமி



Periyar Quotes in Tamil -தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையுடன் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி. (கோப்பு படம் )

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும்,சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்

இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வு சுரண்டப்படுவதையும் ராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார் .அவருடைய பொன்மொழிகள் இதோ....

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்

பெரியாரின் பொன்மொழிகள்

periyar quotes in tamil

ஒவ்வொரு மனிதனும் இறந்து போவது உண்மை தான்.. ஆனால் அவனுடைய முயற்சிகளும் அவனுடைய செயல்களும் அவனோடு இறந்து போவதில்லை.

ஆயிரம் அறிவாளிகளுடன் மோதுவதை விட சிரமமானது ஒரு முட்டாளுடன் மோதுவது.

கல்லை கடவுள் என்று கூறும் மனிதன்.. பார்ப்பவனை தெய்வம் என்று வணங்குவதில்எந்தவொரு அதிசயமும் இல்லை.

உன் சலிப்பும் சோம்பேறித்தனமும் தற்கொலைக்கு சமம்.


தமிழக முன்னாள் முதல்வர் காமராஜருடன் பெரியார். (முதல்படம் ) ராஜாஜியுடன் பெரியார் (இரண்டாவது படம் ) (கோப்பு படம்)

உருவத்தில் மனிதனாகவும்.. செயலில் மிருகமாகவும்.. இருப்பதை விடுத்துமனித தன்மையுடன் வாழப்பழகி கொள்ளுங்கள்.

யார் சொல்லி இருந்தாலும்..எங்கு படித்திருந்தாலும்..நானே சொல்லி இருந்தாலும்..

உன் அறிவுக்கும்..பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.

ஒருவனின் வாழ்வை அழகுபடுத்துவது அவனின் அறிவும் மானமும் தான்

இவை இரண்டும் ஒருவனிடம் எப்போதும் இருக்க வேண்டும்.

ஒருவனின் மூட நம்பிக்கையும் குருட்டு பழக்கங்களும் தான் ஒருவனின் முதல் எதிரிகள்.

இவை இரண்டையும் இல்லாமல் செய்தால் தான் வாழ்வு சிறக்கும்.

மனிதனின் உயிர் நாடி என்பது அவனுக்கு இருக்கும் பகுத்தறிவு தான்..பகுத்தறிவு இல்லாதவன் வாழ்ந்து பலனில்லை.

periyar quotes in tamil

விதியை நம்பி உன்அறிவை இழந்து விடாதே.

சிறந்த மக்களின் ஒழுக்கத்தையும் அறிவையும் கெடுப்பது இந்த மதுப்பழக்கம். ஒரு மனிதன் யாராக இருந்தாலும் சரி அவன் தமிழ் பற்றாளனாக நான் உணர்ந்தாள் நான் அவனுக்கு அடிமையாகமாறி விடுவேன்.

மற்ற மனிதர்களிடம் பழகும் விதத்தையும் ஒழுக்கத்தையும் ஒருவன் தன் சிறு வயதிலேயேநன்றாக கற்றுக் கொண்டானால் அவனே வாழ்க்கையில் உயர்ந்த மனிதன் ஆவான்.

ஒருவன் தன்னிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கின்றானோ அப்படி எல்லோரிடமும் அவன் நடந்து கொள்ள வேண்டும்அதன் பெயர் தான் ஒழுக்கம்.

ஒழுக்க குறைவும் மூட நம்பிக்கையும் ஒருவனின் எப்படிப்பட்டதிறமையையும் வெளிக்கொண்டு வர விடாது.

சமூக வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவிற்கு மீறிய நேர்மையும் கட்டுப்பாடும்உறுதியும் தியாக உணர்வும் இருக்க வேண்டும்.

periyar quotes in tamilஒரு நாடு சொர்க்க பூமியாக மாற வேண்டுமானால் அந்நாட்டு மக்கள்

ஒழுக்கமுள்ளவர்களாக இருப்பது அவசியம்.

ஒரு மனிதனிடம் உள்ள கல்வி அறிவும்.. பகுத்தறிவும்..சுயமரியாதையும் நல்லசிந்தனைகளும் தான்தாழ்ந்து கிடக்கும் மக்களைஉயர்த்தும் ஆயுதங்கள்.

மனிதனானவன் வாழ்க்கைஎன்பது அவனவன் வாழ்வதற்கு மட்டும் தான் என்று ஒருபோதும்கருதக்கூடாது.. வாழ்க்கை என்பது மற்றவர்கள் நலனுக்கும் என்று சிந்திக்க வேண்டும்.

ஒருவனிடம் கடவுள் பக்தி இல்லாவிட்டால் எந்தவொரு இழப்பும் இல்லை.. ஒழுக்கம்இல்லாவிட்டால் தான் இழப்பு. ஒழுக்கம் என்பது தான் மிகவும் அவசியமானது.

மற்ற மனிதர்களுக்கு தொல்லை தராமல் வாழும் வாழ்வேசிறந்த ஒழுக்க வாழ்வு.

என் வாழ்நாள் பணி மனிதர்களிடம் மனிதப் பண்பை வளர்ப்பதே..

தந்தை பெரியார் சமூகத்தில் புரட்ச்சியை ஏற்படுத்திய மிகப் பெரிய புரட்ச்சியாளன் அவரின் இந்த பொன்மொழிகள் உங்களை கவர்ந்திருக்கும் என்று நம்புகின்றோம்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Sep 2022 9:23 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு