Begin typing your search above and press return to search.
ஹரியானாவில் எத்தனால் ஆலை: பிரதமர் மோடி திறப்பு
ஹரியானா மாநிலத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ரூ.900 கோடி மதிப்பிலான எத்தனால் தயாரிப்பு ஆலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
HIGHLIGHTS
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். காணொளி மூலம் நடக்கும் விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய மந்திரிகள் பங்கேற்கின்றனர்.
பானிப்பட்டில் உள்ள அரசின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த எத்தனால் ஆலையில் , ஆண்டிற்கு சுமார் 2 லட்சம் டன் வைக்கோலைப் பயன்படுத்தி 3 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலையில் தினமும் 100 கிலோ லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படும் என்பதால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்.
நாட்டில் உயிரி எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த ஆலை அமைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.