/* */

ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள 3 செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு பிரதமர் அடிக்கல்

ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு நாளை காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

HIGHLIGHTS

ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள 3 செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு பிரதமர் அடிக்கல்
X

பிரதமர் மோடி 'இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தொடக்கம்' நிகழ்ச்சியில் பங்கேற்று, சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு நாளை காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.

செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதும், நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிப்பதும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டமாகும். இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, குஜராத்தின் தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை அசாமின் மோரிகானில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (OSAT) தொழிற்சாலை மற்றும் குஜராத்தின் சனந்தில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (OSAT) தொழிற்சாலை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது..

இந்தியாவில் செமிகண்டக்டர் தொழில் திட்டங்கள் அமைப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் (டிஇபிஎல்) தோலேரா சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தில் (டி.எஸ்.ஐ.ஆர்) செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை அமைக்கப்படும். 91,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மொத்த முதலீட்டுடன், இது நாட்டின் முதல் வணிக செமிகண்டக்டர் தொழிற்சாலையாகும்.

அசாமின் மோரிகானில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (OSAT) வசதியை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செமிகண்டக்டர் அம்செம்பளி, சோதனை, மார்க்கிங் மற்றும் பேக்கேஜிங் (ATMP) என மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் சுமார் 27,000 கோடி ரூபாய் மொத்த முதலீட்டில் அமைக்கப்படும்.

சனந்தில் உள்ள அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (ஓஎஸ்ஏடி) தொழிற்சாலை, சிஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மூலம் செமிகண்டக்டர் அசெம்பிளி, சோதனை, மார்க்கிங் மற்றும் பேக்கேஜிங் (ஏடிஎம்பி) ஆகியவற்றிற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் சுமார் 7,500 கோடி ரூபாய் மொத்த முதலீட்டில் அமைக்கப்படும்.

இந்த தொழிற்சாலைகள் மூலம், செமிகண்டக்டர் சூழல் அமைப்பு வலுப்படுத்தப்பட்டு, இந்தியாவில் உறுதியாக காலூன்றும். இந்த தொழிற்சாலைகள் செமிகண்டக்டர் தொழிலில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, மின்னணு, தொலைத்தொடர்பு போன்ற தொடர்புடைய துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும் இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மற்றும் செமிகண்டக்டர் தொழில்துறையின் தலைவர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர்.

பின்தங்கிய பிரிவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி

பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமரின் சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான மக்கள் நலன் (சூராஜ்) தேசிய இணைய தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். நாட்டில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்குகிறார். மேலும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

பின்தங்கிய பிரிவினருக்கு கடன் ஆதரவுக்கான பிரதமர்-சூராஜ் தேசிய இணையதளம், பின்தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை உள்ளடக்கியது. இது சமூகத்தின் மிகவும் நலிவடைந்தப் பிரிவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்றத்திற்கான முயற்சியாகும். வங்கிகள், என்பிஎப்சி-எம்எப்ஐ (NBFC-MFI)-கள் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் தகுதியான நபர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியின் போது, இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமாஸ்தே) திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர் நண்பர்களுக்கு (கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் தொழிலாளர்கள்) ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் பிரதமர் வழங்குவார். இந்த முயற்சி சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றும் முன்னணி தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான மற்றொரு முன்னெடுப்பாகும்.

இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பயனாளிகள் பங்கேற்கின்றனர்.

Updated On: 12 March 2024 5:35 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...