/* */

100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு: தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான ஊதியத்தை மாநில வாரியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

HIGHLIGHTS

100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு: தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?
X

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

மக்களவை தேர்தலுக்கான, முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, மாநில வாரியாக தற்போது பின்வரும் ஊதிய விவரங்கள் தான் பின்பற்றப்படுகிறது. மத்திய அரசின் இந்த ஊதியத்தை உயர்த்தும் நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

1 - ஆந்திர பிரதேசம் - ரூ.300

2 - அருணாச்சல பிரதேசம் - ரூ.234

3 - அசாம் - ரூ.249

4 - பீகார் - ரூ. 245

5 - சத்தீஸ்கர் - ரூ.243

6 - கோவா - ரூ.356

7 - குஜராத் - ரூ.280

8 - ஹரியானா - ரூ.374

9 - இமாச்சல பிரதேசம் - ரூ.236 - ரூ.295

10 - ஜம்மு & காஷ்மீர் - ரூ.259

11 - லடாக் - ரூ.259

12 - ஜார்கண்ட் - ரூ.245

13 - கர்நாடகா - ரூ.349

14 - கேரளா - ரூ.346

15 - மத்திய பிரதேசம் - ரூ.243

16 - மகாராஷ்டிரா - ரூ.297

17 - மணிப்பூர் - ரூ.272

18 - மேகாலயா - ரூ.254

19 - மிசோரம் - ரூ.266

20 - நாகாலாந்து - ரூ.234

21 - ஒடிசா - ரூ.254

22 - பஞ்சாப் - ரூ.322

23 - ராஜஸ்தான் - ரூ.266

24 - சிக்கிம் - ரூ.249

25 - தமிழ்நாடு - ரூ.319

26 - தெலங்கானா - ரூ.300

27 - திரிபுரா - ரூ.242

28 - உத்தரபிரதேசம் - ரூ.237

29 - உத்தராகண்ட் - ரூ.237

30 - மேற்குவங்கம் - ரூ.250

31 - அந்தமான் & நிகோபர் - ரூ.329 - ரூ.347

32 - டையூ & டாமன் - ரூ.324

33 - லட்சத்தீவு - ரூ.315

34 - புதுச்சேரி - ரூ.319

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, மத்திய, மாநில அரசுகள் வாக்காளர்களை கவரும் விதமாக எந்தவொரு நலத்திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. அப்படி அறிவித்தார் அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்றமாகும். அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான், ஊதிய உயர்வானது கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளதாகா, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On: 28 March 2024 5:23 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்