100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு: தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான ஊதியத்தை மாநில வாரியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
HIGHLIGHTS
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
மக்களவை தேர்தலுக்கான, முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, மாநில வாரியாக தற்போது பின்வரும் ஊதிய விவரங்கள் தான் பின்பற்றப்படுகிறது. மத்திய அரசின் இந்த ஊதியத்தை உயர்த்தும் நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
1 - ஆந்திர பிரதேசம் - ரூ.300
2 - அருணாச்சல பிரதேசம் - ரூ.234
3 - அசாம் - ரூ.249
4 - பீகார் - ரூ. 245
5 - சத்தீஸ்கர் - ரூ.243
6 - கோவா - ரூ.356
7 - குஜராத் - ரூ.280
8 - ஹரியானா - ரூ.374
9 - இமாச்சல பிரதேசம் - ரூ.236 - ரூ.295
10 - ஜம்மு & காஷ்மீர் - ரூ.259
11 - லடாக் - ரூ.259
12 - ஜார்கண்ட் - ரூ.245
13 - கர்நாடகா - ரூ.349
14 - கேரளா - ரூ.346
15 - மத்திய பிரதேசம் - ரூ.243
16 - மகாராஷ்டிரா - ரூ.297
17 - மணிப்பூர் - ரூ.272
18 - மேகாலயா - ரூ.254
19 - மிசோரம் - ரூ.266
20 - நாகாலாந்து - ரூ.234
21 - ஒடிசா - ரூ.254
22 - பஞ்சாப் - ரூ.322
23 - ராஜஸ்தான் - ரூ.266
24 - சிக்கிம் - ரூ.249
25 - தமிழ்நாடு - ரூ.319
26 - தெலங்கானா - ரூ.300
27 - திரிபுரா - ரூ.242
28 - உத்தரபிரதேசம் - ரூ.237
29 - உத்தராகண்ட் - ரூ.237
30 - மேற்குவங்கம் - ரூ.250
31 - அந்தமான் & நிகோபர் - ரூ.329 - ரூ.347
32 - டையூ & டாமன் - ரூ.324
33 - லட்சத்தீவு - ரூ.315
34 - புதுச்சேரி - ரூ.319
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, மத்திய, மாநில அரசுகள் வாக்காளர்களை கவரும் விதமாக எந்தவொரு நலத்திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. அப்படி அறிவித்தார் அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்றமாகும். அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான், ஊதிய உயர்வானது கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளதாகா, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.